The Best Law Firm in Chennai Tamil Nadu India

COMPANY LAW FIRM ADVOCATES,CRIMINAL LAWYERS,CIVIL & PROPERTY ATTORNEYS

Fashion Designing Institute

GREEN ORGANICS FOOD EXPORTER

Tamil Siragugal|Tamil News Channel Online

Saturday, September 6, 2014

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், கிளிநொச்சி, வவுனியா நகரப்பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோககம்



தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15வது மாநாடு வவுனியாவில் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரால், தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதை விடுத்து விட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், கிளிநொச்சி, வவுனியா நகரப்பகுதிகளில் இன்று (06.09.2014 அன்று) துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
மலேப்பாம்பு


தந்தை செல்வா அவர்களால் செல்லமாக “மலேப்பாம்பு” என்று அழைக்கப்பட்ட வவுனியா ஓமந்தை அரசமுறிப்பில் வதியும் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவரால் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

அத்துடன் முள்ளிவாய்க்கால் வரை சென்று தமிழ் இனம் அடைந்த துயரங்களை நேரில் கண்ட சாட்சியாக தானிருப்பதாகவும், தன் மனம் தமிழ் இனத்தின் விடிவைத்தவிர வேறு எதையும் சிந்திக்க மறுப்பதால் குறித்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பேராளர் மாநாடு நாளை (07.09.2014 அன்று) வவுனியாவில் நடைபெறவுள்ள நிலையில், “கட்சிகளைப் பலப்படுத்துவதை விடுத்து, கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்!” என்று, அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு உரைக்கும்படியாக வேண்டுகோள் விடுத்து வெளியிடப்பட்டுள்ள அத்துண்டுப்பிரசுரங்களில் உள்ளதை உள்ளவாறே, எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றியுள்ளோம். படித்துப்பாருங்கள். 

தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (மலேப்பாம்பு) 
அரச முறிப்பு, ஓமந்தை, வவுனியா. 
கைப்பேசி எண்: +094 77 8113 728

கட்சிகளைப் பலப்படுத்துவதை விடுத்து, கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்!
தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினனின் அன்பான வேண்டுகோள்

தமிழினம் சிங்களப் பேரினவாதிகளின் அடிமைகளாக மாறப்போகிறது. இதனைத் தடுப்பதற்கும், தமிழினத்தின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கும், அதன் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்கும், தமிழ் மக்களின் சுய நிர்ணயக் கோரிக்கையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற தூரநோக்குடனேயே தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை உருவாக்கினார். அந்த நோக்கத்திற்காகவே அவர் அயராது உழைத்தார். அதனாலேயே அவர் “ஈழத்தின் காந்தி” என்றும் “தந்தை செல்வா” என்னும் சிறப்பு அடைமொழிகளைப் பெற்றார்.

தனியொரு கட்சியினால் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதை நன்கறிந்ததன் பின்னரே, “தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி”யை உருவாக்க முன்வந்ததுடன் தான் உருவாக்கிய கட்சியை பிரபல்யப்படுத்தவும் விருப்பமின்றியே தனது உயிர் பிரியும் வரையில் தந்தை செல்வா வாழ்ந்து காட்டினார். தனது இனத்தின் விடுதலைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாரே அன்றி, கட்சிக்காக இலட்சியத்தை விட்டுக்கொடுக்க அவர் முன்வந்ததில்லை.

“எமது இளைஞர்கள் இனியும் பொறுமையுடன் இருக்க மாட்டார்கள்” என்று, அண்ணன் அமிர் அவர்கள் இளைஞர்களின் மனோநிலையை வெளிப்படுத்தியவுடன் அன்றைய இளைஞர்கள் சிங்கள அரசிற்குப் புரிகின்ற மொழியில் பேச ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தலைமை கொடுக்க நாம் பின்வாங்கிவிட்டோம் என்ற உண்மையை மிகவும் ஆழ்ந்த மனக்கவலையுடன் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். அதன் விளைவாக நாம் அரசியல் அஞ்ஞாதவாசம் ப+ணும் நிலை ஏற்பட்டது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன்


ஆனால் பொறுப்பு மிக்க இளைஞர்கள் மீண்டும் எம்மையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பையும், வயதில் மூத்தவர்கள் அனுபவம் நிறைந்தவர்களாக இருப்பர் என்னும் எதிர்பார்ப்பில் அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையிடம் கையளித்தனர். பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயரை தனியொரு நபராக ஆனந்த சங்கரி அபகரித்துச் சென்றவுடன் உறங்கு நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியின் பதிவைத் தூசுதட்டி அதன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு உதவினர். இங்கு இளைஞர்களின் ஐக்கியத்திற்கான அர்ப்பணிப்பைப் பார்க்க முடிகின்றது.

“குறைந்தபட்சம் எமது மக்களின் பிரச்சினை தீரும் வரையிலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஒரு பொதுவான குடை அமைப்பின்கீழ் செயல்பட்டு எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றியவுடன் கட்சி அரசியலை முன்னெடுக்கலாம்” என்னும் இளைஞர்களின் தலைமையிலான அங்கத்துவக் கட்சிகளின் உருக்கமான வேண்டுகோளை உதாசீனம் செய்து எமது கட்சியை மட்டும் முன்னிலைப்படுத்தும் செயல் நியாயமானதுதானா? தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் எம்மைப் பற்றிய பதிவு எவ்வாறு இருக்கும் என்பதை இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமை உணர்ந்துள்ளதா?

முள்ளிவாய்க்கால் வரை சென்று எமது இனம் அடைந்த துயரங்களை நேரில் கண்ட சாட்சியாக நானிருப்பதால், என் மனம் எமது இனத்தின் விடிவைத் தவிர வேறு எதையும் சிந்திக்க மறுக்கின்றது. இன்று நடைபெறுகின்ற அவலங்கள் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தை நன்கு எடுத்துரைப்பதாகவே அமைகின்றன. அதன் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உளப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்தச் சொல்கிறது. சொல்வது என்கடன். கேட்பதும் விடுவதும் உங்கள் கைகளில்.

முக்கிய குறிப்பு:

1958ம் ஆண்டு பொத்துவில் அறப்போர் குழுத்தலைவர் அரியநாயகம் அவர்களும், கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் அவர்களும் மட்டக்களப்புக்கு பாதயாத்திரை வந்தபோது, கல்முனை இராம கிருஸ்ணன் மிஸன் (RKM) பாடசாலையில் அவர்களை கவிஞர் பாவநாதசிவம் இயற்றிய “தமிழரசு கீதம்” பாடி வரவேற்ற எனது 16வது வயதிலிருந்து எனக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்குமான உறவு ஆரம்பிக்கிறது. (இன்று கட்சியிலுள்ள பலர் இந்த கீதத்தையே அறிந்திருக்க வாய்ப்பில்லை.) 

பின்னாளில் 1960ம் ஆண்டு கட்சியின் “தமிழரசு வாலிபர் முன்னணி”யின் நிர்வாகத்தில் முக்கிய செயல்பாட்டாளராக இருந்ததோடு, கட்சியின் சார்பில் “விடுதலைப்பரணி” மாதப்பத்திரிகை அச்சிட்டு வெளியிட்டவர்களில் நானும் ஒருவன். இலங்கை தமிழரசுக்கட்சியின் சிறந்த மேடைப்பேச்சாளனாகவும் இருந்திருக்கிறேன்.   
வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சியின் 15வது மாநாடு

Thursday, September 4, 2014

ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

தனது சகோதரர்கள் எதிர்காலத்தை குறித்து என்ன திட்டமிடுகின்றனர் என்பதை எப்போதும் கட்டியம் கூறுபவர் பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்ட அவரது வார்த்தைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

கோத்தாபயவின் ஆதரவாளரான றொகான் குணரட்ன தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்குள் அனுமதித்ததற்காக அரசாங்கத்தை சாடியதை மறந்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தத் தவறு சரிசெய்யப்படலாம். தமிழ் தேசிய கூட்டமைபு தடை செய்யப்படலாம். பயங்கரவாதச் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கப்படலாம்.

ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ராஜபக்சேக்கள் தங்களுடைய குடும்ப ஆட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் உள்ள சகல விதமான எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களையும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஈவிரக்கம் இன்றி அடக்கி ஒடுக்குவார்கள்.
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகுவை; கடுமையாக விமர்சிக்கும் தீவிர சியோனிஸ்ட்கள் அவரை இன்னொரு நாட்டை பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். அந்த நாடு இலங்கை. படைபலத்தை உறுதியான விதத்தில் பயன்படுத்துவதன் மூலமாக ஹமாசிற்கு மீளமுடியாத தோல்வியை எப்படி வழங்குவது என்பதை இலங்கையிடம் கற்குமாறு அவர்கள் கோருகின்றனர்.
நக்பாமா முதல் இஸ்ரேல் தொடுத்த போர்கள் ஒவ்வொன்றும் வெற்றியில் முடிவடைந்துள்ளன. ஆனால் பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணமுடியாமலுள்ளது. அது எமது உயிர்களை, நம்பிக்கைகளை, எமது மனிதாபிமானத்தை சிதைக்கிறது என சர்வதேச புகழ்வாய்ந்த இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் குரொஸ்மன் கடந்த வாரம் கவலை வெளியிட்டார்.
இதன் மூலமாக கற்க வேண்டிய பாடம் மிக தெளிவானது. இராணுவ வெற்றிகள் சாத்தியமானவை, இராணுவ தீர்வுகள் ஒருபோதும் சாத்தியமானவை அல்ல(வெற்றிகரமான இனப்படுகொலைகளை புரிந்தால் மட்டுமே அவையும் இன்றைய உலகில் சாத்தியமில்லை).
இராணுவமயமாக்கல் என்ற விசயத்தில் இஸ்ரேல் முதலாவதாக உள்ளது. அது தான் பயங்கரவாதிகள் என தான் கருதுவோர்கள் குறித்து சிறிதும் ஈவிரக்கமற்ற ஒரு கொள்கையை பின்பற்றுகிறது. ஆதற்கு அமெரிக்காவின் என்றும் குறைவடையாத ஆதரவு உள்ளது. எனினும் சமாதானமும் அமைதியும் அந்த நாட்டிற்கு சாத்தியப்படவில்லை. பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத வரை அது சாத்தியமில்லை.
ராஜபக்சாக்கள் இஸ்ரேலின் தந்திரோபாயத் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்று வேறு வழிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 5 வருடத்திற்குப் பின்னரும் சந்தேகம் வெறுப்புனர்வு ஐக்கியமின்மை போன்றவை காணப்படுகின்றன. புதிய மோதல்கள் உருவாவதற்கான விதைகள் வீசப்படக் கூடிய நச்சு நிலமாக நாடு காணப்படுகிறது.
இலங்கையும் இஸ்ரேலும் எப்படி யுத்தத்தில் ஈடுபடக் கூடாது சமாதானத்தை எப்படி கட்டி எழுப்பக் கூடாது என்ற விசயங்களில் ஒருவரிடம் இருந்து ஒருவர் பாடம் கற்க வேண்டும்.
சியோனிஸ்டுகள் போன்று ஆளும் குடும்பத்தினரும் இனப் பிரச்சனை ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இலங்கையை சிங்கள பௌத்தர்களின் புனித நாடாக கருதுகின்றனர். சிறுபான்மையினரின் துயரங்களை நியாபுர்வமற்றவையாக, ஏற்றுக் கொள்ள முடியாதவையாக கருதுகின்றனர். சிறுபான்மை விவகாரங்களை பொலிஸ் இராணுவத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பு விவகாரங்களாக அவர்கள் கருதுகின்றனர்.
13வது திருத்தம் அதன் உண்மையான வடிவத்தை இழந்த பின்னரும் உயிர்வாழ்வதற்கு காரணம், அரசியல் தீர்வு அவசியம் என ராஜபக்சாக்கள் கருதுவதால் அல்ல, மாறாக இந்தியாவை சீற்றத்திற்குள்ளாக்க விரும்பாததே அதற்கு காரணம். உள்ளுர் தீர்வுகளை தயாரிக்கும் முயற்கள் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் செயற்படும் நெருக்கடியான நடவடிக்கைகளுக்கான நிலையத்தின் பிரிசிம் இதழில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே தனது உலகப்பார்வையை முன்வைத்துள்ளார்.
தனது சகோதரர்கள் எதிர்காலத்தை குறித்து என்ன திட்டமிடுகின்றனர் என்பதை எப்போதும் கட்டியம் கூறுபவர் பாதுகாப்பு செயலாளர். அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்ட அவரது வார்த்தைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.
கோத்தாபயவின் கொள்கை
இலங்கை கடந்த காலங்களிலிருந்து பாடங்களை கற்று மீண்டும் அந்த தவறுகள் நிகழ்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார் கோத்தாபய. நிராகரிக்க முடியாத உண்மை, ஆனால் அனைத்தும் நீங்கள் வரலாற்றை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விசயங்கள். கோத்தாபயவை பொறுத்த வரையில் கடந்த காலம் என்பது-சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தையோ, தரப்படுத்தலையோ அல்லது ஏனைய சிங்கள் உயர்குலத்தின் அதீத நடவடிக்கைகளையோ உள்ளடக்கியது அல்ல. அவரை பொறுத்தவரை ஈழ யுத்தத்திற்கு அரசியல் காரணங்கள் எதுவும்இல்லை, பிரிவினைவாதத்திற்கான தமிழர்களின் விருப்பே ஓரே காரணம்.
இவ்வாறான கருத்து அவரிடம் காணப்படுவதை கருத்தில் கொண்டால் எதிர்காலம் கடுமையான சட்டங்கள், அதிகளவு இராணுவமயப்படுத்தல், அதிகளவு ஒடுக்குமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக காணப்படப்போகின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.
இலங்கை எதிர்கொள்ளும் பல பாதுகாப்பு பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;
"மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க கூடிய சாத்தியக்கூறுகள்’’ - உண்மையான இலக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும், ஏனைய ஜனநாயக தமிழர்களும்.
விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரிவிடமிருந்தும்,வெளிநாடுகளிலுள்ள அவர்களுடைய ஆதரவாளர்களிடமிருந்தும் நிதிகளை பெறும் அமைப்புகள் உள்ளன. அவர்கள் ஜனநாயமுகமூடியை அணிந்திருந்தாலும் அவர்களுடைய கருத்துக்கள் தீவிரவாத பிரிவினைவாத கொள்கை இன்னமும் காணாமல் போய்விடவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது. இலங்கையை பிரிப்பதே அவர்களுடைய இறுதி நோக்கம். பிரிவினைவாதத்தின் பெயரால் சில தீவிரவாத சக்திகள் மீண்டும் துணிச்சல் பெற்று ஆயுதம் ஏந்தலாம் என்பதையே அவர்களுடைய பேச்சுக்களும் செயற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. இது மிக தீவிரமாக எடுக்க வேண்டிய தேசத்திற்கான பெரிய அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபயவின் ஆதரவாளரான றொகான் குணரட்ன தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்குள் அனுமதித்ததற்காக அரசாங்கத்தை சாடியதை மறந்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தத் தவறு சரிசெய்யப்படலாம். தமிழ் தேசிய கூட்டமைபு தடை செய்யப்படலாம். பயங்கரவாதச் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கப்படலாம்.
ஏனைய தீவிரவாத குழுக்களின் எழுச்சி - இலக்குகள் ஜே.வி.பி. யும் ஏனையவர்களும்.
கடந்த கால கிளர்ச்சிகளில் நாம் எதிர் கொண்ட குழுக்களின் எச்சங்கள் உள்ளன. சிலர் இடது சாரிக் கொள்கைகளுக்காக மக்களை மீண்டும் ஆயுதம் ஏந்த தூண்ட முயல்கின்றனர். இவர்கள் சிலர் விடுதலைப் புலிகளின் முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாணவர்களை தீவிரவாதமயப்படுத்தி அவர்களை வீதியில் இறங்கச் செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனது என கோத்தாபய எழுதி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அரசியல்வாதிகள் தொழிற் சங்கங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றை இலக்குவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது.
ஐ.தே.க. இன் தீவிர உறுப்பினர்களும் பழிவாங்கப்படலாம். ராஜபக்சேவுக்கு சார்பான எதிர்க்கட்சிகள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம்.
மோசமடைந்து வரும் இன உணர்வுகளும் மத ரீதியான வன்முறைகளும் - உண்மையான இலக்கு முஸ்லிம்கள்
இனக்குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்திற்கு பிந்திய இலங்கையின் கரிசனைக்குரிய விசயமாக உள்ளது. அதற்கு தீர்வு காணவிட்டால் எதிர்காலத்தில் இன ரீதியான பதட்ட நிலை தலைதூக்கலாம் யுத்த காலத்தின் விடுதலைப்புலிகளால் முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டனர்,இதன் பின்னர் அவர்களை தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்யத் தொடங்கினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் இந்த குழுக்கள் தற்பாதுகாப்பு என்ற நிலையிலிருந்து விலகி சென்று செயற்படத்தொடங்கியுள்ளன. சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் இவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
அமெரிக்காவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்த போலியான கதைகளும் உருவாக்கப்படலாம். பாரம்பரியமற்ற தொழில் நுட்பங்களால் உருவாகும் ஆபத்து சமூக ஊடகங்கள் போன்றவை. உண்மையான இலக்கு ராஜபக்சேவுக்கு எதிரான பிரச்சாரங்கள்.
இறுதியான அச்சுறுத்தல் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் எழுந்துள்ளது. மூக ஊடகங்கள் முகப் புத்தகங்கள் போன்றவை தமது நலன்களுக்காக செயற்படம் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.

ராஜபக்சேக்களின் முடிவு:- 

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவை இல்லாத போதிலும் தற்போதய இறுக்கமான கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. மேலும் வடக்குக் கிழக்கு உட்பட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இராணுவம் நிலை கொண்டிருப்பதும் முக்கியமானது. என கோத்தாபயகுறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ராஜபக்சேக்கள் தங்களுடைய குடும்ப ஆட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் உள்ள சகல விதமான எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களையும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஈவிரக்கம் இன்றி அ டக்கி ஒடுக்குவார்கள். சுந்தேகம் சகிப்பற்ற தன்மை வெறுப்புடன் கூடிய தேசப் பற்று போன்றவை காரணமாக இலங்கை தனக்குள்ளேயே யுத்தம் செய்யும் சமூகமாக மாறும். ராஜபக்சேக்களின் சுயரூபம்!!!

ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது.
ஒரு வாலி நிறைய ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரை எடுத்து அதை அப்படியே தலையில் கொட்டிக் கொள்வது தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபலங்கள் பலர் மேற்கொண்டனர்.
இது இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) இவர்தான் ரைஸ் பக்கெட் சேலஞ்சை துவக்கிவைத்தவர். இவரது சமூக தொண்டை பாராட்டும் வகையில் அவருக்கு கர்மவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகாங்கோ (iCONGO) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா.வும் விருதினை வழங்குகிறது.
இந்த விருது சிறிய காரியங்கள் மூலம் உலகில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழாவில், மஞ்சுலதா கலாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இத்தகவலை, ஐகாங்கோ நிறுவனர் ஜெரோனினோ அல்மைதா ’தி இந்து’ (ஆங்கிலம்) அனுப்பியுள்ள மின் அஞ்சலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விருது எனக்கு ஊக்கமளிக்கிறது:
விருது குறித்து மஞ்சுலதா கூறுகையில்: "ரைஸ் பக்கெட் சேலஞ்ச் கர்மவீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான், 'கூஞ்ச்' 'கிவ் இந்தியா' போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த நற்செயலை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது" என்றார்.
'தி இந்து' (ஆங்கிலம்) இச்செய்தியை முதல் முறையாக வெளியிட்ட பின்னர் நாடு முழுவதும் இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. மற்ற ஊடகங்களிலும் இது பிரபலமானது. மஞ்சுலதா தொடங்கிய இணையதளத்தை 5 லட்சம் பேர் விசிட் செய்துள்ளனர். 10,000 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான பிரதீப் ஏற்கெனவே ரைஸ் பக்கெட் சால்ஞ்ச் மூலம் பெருமளவில் அரிசியை வழங்கியுள்ள நிலையில், தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் ரைஸ் பக்கெட் சால்ஞ்சை ஆதரிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2 முதல் 7 வரை கோவா மாநிலத்தில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்ப நிலையமும் ரைஸ் பக்கெட் சேலஞ்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
நன்றி,
தி இந்து (பாரதி ஆனந்த்)


தொடர்புடைய செய்தி:
உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள ஐஸ் பக்கெட் சவாலுக்குப் ("Ice Bucket challenge") பதிலாக இந்தியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் 'ரைஸ் பக்கெட் சவால்' ("Rice Bucket challenge") என்ற புதிய விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். நரம்பு சம்பந்தப்பட்ட ஏஎல்எஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அந்த நோய் தொடர்பான தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேகரிப்பதே ஐஸ் பக்கெட் சவாலின் நோக்கம். ஐஸ் பக்கெட் சவாலில் ஒருவர் தனது தலையில் ஐஸ் கட்டிகளுடன் கூடிய குளிர் நீரை ஊற்றிக் கொண்டு இன்னொருவருக்கு சவால் விடுப்பார்.
லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் குவித்துள்ளது. ஹாலிவுட் பிரபலங்களான டாம் குரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பில் கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், டெய்லர் ஸ்விப்ட், ஷகிரா, கடி பெர்ரி, லேடி காகா, மட் டமோன், உசைன் போல்ட், கிசெலே புன்ட்சென், ஜஸ்டின் பெய்பர், மார்க் சக்கர்பெர்க், நெய்மர், கேட் மோஸ், டேவிட் மற்றும் விக்டோரியா பெக்காம் போன்ற பிரபலங்கள் இதுவரை இந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
உலகின் பல நாட்டினரும் இந்த சவாலை வரவேற்றுள்ள நிலையில், சீன மக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சவால் என்ற பெயரில் கேலன் கணக்கிலான தண்ணீரை வீணடிக்கும் செயல் என்று அங்கே கண்டனக் குரல் எழுந்து வருகிறது. ஆனால், எதையும் வீணடிக்காமல் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாத நம் நாட்டின் ஏழைமக்களின் பசி நோயைப் போக்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி(38) என்ற பெண்மணி தொடங்கியுள்ள "ரைஸ் பக்கெட் சவால்", ஐஸ் பக்கெட் சவாலுக்கு இணையாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வழியாக உலகளாவிய அளவில் வேகமாக பரவி, பிரபலமடைந்து வருகின்றது.
கொடுக்கும் சக்தி படைத்த யாராயினும், வசதி இல்லாத ஏழை ஒருவருக்கு ஒரு வாளி அரிசி கொடுக்க வேண்டும். அரிசி கொடுத்த புகைப்படத்தை 'பேஸ்புக்கில்' பதிவேற்றம் செய்கையில் ஆயிரக்கணக்கான 'லைக்'களும், 'ஷேர்'களும் குவிந்து அந்த கொடையாளரின் புகைப்படமும், இந்த செய்தியும் பரவத் தொடங்கி, புகழை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
தனது பங்குக்கு முதல் பயனாளிக்கு 20 கிலோ அரிசி வழங்கி இந்த அரிய சேவையை தொடங்கி வைத்த மஞ்சு லதா கலாநிதி, 'சமைக்காத அரிசி மட்டுமல்ல.., ஒரு பக்கெட் சமைத்த உணவு, வசதி இருந்தால் ஒரு பக்கெட் பிரியாணி, அல்லது சுமார் 100 ரூபாய் அளவிலான மருந்துகளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கி, யார் வேண்டுமானாலும் இந்த மக்கள் சேவையில் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சவாலை ஏற்று தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கடந்த புதன்கிழமையன்று 2200 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளனர். மேலும், இதுவரை நாடுதழுவிய அளவில் ஆயிரக்கணக்கான கொடையாளர்கள், இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கியுள்ளனர். இதன் மூலம் தண்ணீர் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, வறுமைப் பேயை விரட்டி, பசி நோயை போக்கும் சமுதாயத்துக்கான சிறந்த மாற்று மருந்தாக இந்த சேவை கருதப்படுகின்றது.
மஞ்சு லதா கலாநிதி என்பவரின் மூளைக்குழந்தையான இந்த "ரைஸ் பக்கெட் சவால்" நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசியை நிரப்பி, தேவையுள்ள நபர்களுக்கு வழங்கி உதவுங்கள். அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து, 'பேஸ்புக்'கில் பதிவேற்றம் செய்து, பிறரும் இந்த நல்லபழக்கத்தை கடைபிடிக்க உதவுங்கள்.

பிரகடனங்கள் தோல்வியடைந்தால் மாத்திரமே, கூட்டமைப்பு மாநாடு நடத்துவாராம் மாவை.

பிரகடனங்கள் தோல்வியடைந்தால் மாத்திரமே, கூட்டமைப்பு மாநாடு நடத்துவாராம் மாவை.

இலங்கை தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய, தேர்தல் திணைக்களத்தில் தம்முடைய கட்சிகளின் பதிவை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வருடாந்த கூட்டத்தையோ அன்றி, சிறப்பு மாநாட்டையோ நடத்த வேண்டிய தேவையிருக்கிறது. அவ்வாறு செய்யத்தவறின் கட்சிகளின் பதிவு இரத்துச்செய்யப்படும். 

இதற்காக, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளும் மாநாடோ அன்றி, பொதுக்கூட்டமோ நடத்துவது தவறில்லை. ஆனால் இந்த நான்கு கட்சிகளும் தத்தமது தனித்துவத்தை பேணுவதற்கு பதிலாக, கூட்டமைப்பின் ஐக்கியத்தையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வலியுறுத்தி, மக்கள் மயப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். 

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் (தமிழரசுக்கட்சியை தவிர), தமிழ் தேசியக்கூட்டமைப்பை வலிமை மிக்க சட்டவலுவுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்கின்ற “ஒரே கட்சி, ஒரே கொள்கை” அமைப்பாக மிளிரச்செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஏக்கத்துடனும் உழைக்கின்றன. அதற்காகவே காத்திருக்கின்றன. 

நடைபெற்று முடிந்துள்ள (யாழ்ப்பாணத்தில்) ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினதும், புளொட்டினதும் (சுவிஸ்ஸில்) வருடாந்த மாநாட்டில், இவ்விரு கட்சிகளும் ஐக்கியம் எனும் தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக அறிவித்து விட்டன. ரெலோ கட்சியினது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தமது விருப்பத்தை கூறி விட்டார்.

இந்நிலையில் தமது 15வது மாநாட்டுக்காக தயாராகிவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை.சேனாதிராசா, தமது கட்சியின் பிரகடனங்களில் ஒன்றாக,

“கேள்வி குறியாக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் விடயம், திட்டமிட்ட நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றம், பௌத்த பிக்கு அமைப்புகள் மற்றும் கடும்போக்கு சிங்கள அமைப்புகளின் தீவிரவாத போக்கு போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கு, இலங்கை தமிழரசுக்கட்சி வழங்கும் குறிப்பிட்ட கால அவகாசத்தை அரசு காலம் கடத்துமெனில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விசேட மாநாடொன்றைக்கூட்டி பின்னர் ஒன்று திரண்ட சாத்வீக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதிலிருந்து, பிரகடனம் வெற்றி பெற்றால் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தனிவழி போகும் நினைப்பில் இருப்பதும், பிரகடனம் தோல்வியடைந்தால் மாத்திரமே தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதென்ற முடிவிலும், தமிழரசுக்கட்சி இருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது. 

ஏற்கனவே, இலங்கை தமிழரசுக்கட்சியை கூட்டமைப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுகின்றது என்று தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கூறியிருந்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. 

-தமிழ் மகள்-

Saturday, October 12, 2013

தன்னம்பிக்கை பற்றிய ஒரு துறவியின் கதை.

தன்னம்பிக்கை பற்றிய ஒரு துறவியின் கதை.
அணிந்திருந்த ஆடை பெருமளவு கிழிந்ததால் புத்தாடை பெற்றார் புத்தரின் சீடரொருவர். புத்தருக்கு அவர் தந்த அறிக்கை: “புத்தாடை அணிந்தேன். பழைய ஆடையை படுக்கை விரிப்பாய் போட்டிருக்கிறேன். பழைய படுக்கை விரிப்பை ஜன்னல் திரைச்சீலை ஆக்கினேன். பழைய திரைச்சீலையைக் கிழித்து பாத்திரங்கள் துடைக்கிறேன்.பாத்திரங்கள் துடைத்த பழந்துணியைக் கிழித்து விளக்குக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன்”.எதையும் விரயம் செய்யாத விவேகமே துறவு.

Friday, October 11, 2013

கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி

கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி


கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.

""உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''

இதற்கு, ""ஸôரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.

""நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.

""நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
""இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
""இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.

ஆனியன், தக்காளி மற்றும் ஐஸ் க்ரீம் மூணும் பிரண்ட்

ஒரு ஊருல ஒரு ஆனியன், தக்காளி மற்றும் ஐஸ் க்ரீம் மூணும் பிரண்ட் இருந்தாங்க. ஒரு நாள் மூணும் பீச்சுக்கு குளிக்க போனாங்க, அப்ப சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் க்ரீம் தண்ணீல போய் கரைஞ்சு போய்டிச்சு. தக்காளியும் ஆனியனும் அங்கே பொரண்டு பொரண்டு அழுதாங்க!!! அப்புறம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க .

.வர்ற வலியுல ஒரு லாரில ஆக்சிடென்ட் ஆயி தக்காளி நசுங்கி போச்சு!!வொடனே ஆனியன் மட்டும் தனியா அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி" ஐஸ் க்ரீம் செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்...ஆனா நான் நாளைக்கு செதேன்னா எனக்காக அழுக யாரு இருக்கா ஊ ஆ ன்னு அழுதுகிட்டே கேட்டுச்சாம்!!!"

அதுக்கு கடவுள் சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருகான்களோ எல்லாரும் அழுவாங்கன்னு சொன்னாராம் கடவுள்..அதனாள்ள இனிமே வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணுல தண்ணி வருதுன்னு யாராவது கேட்டா திரு திருன்னு முழிக்காம இந்த கதைய சொல்லுங்க ஓகேயா.